Thirumurai Koorum Marai,Vedam, Velvi -3 sambandar
  • Sambandar :

    Sundarar calls him : நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
    ஞான சம்பந்த
    Sambandar Calls himself: மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
    சம்பந்தன்(1-130-11)

    The following verses are from Sambandar
    Thevaram.

    ஏரிசையும்
    வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று

    நேரியநான்
    மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோ னின்றகோயில்

    பாரிசையும்
    பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது மோசைகேட்டு

    வேரிமலி பொழிற்கிள்ளை
    வேதங்கள் பொருட்சொல்லு மிழலையாமே.





    (1-132-1)



    அழகிய வடவால மரத்தின்கீழ் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்குக் கருணையோடு
    நேரிய நால்வேதங்களின் உண்மைப்பொருளை உரைத்து அவர்கட்குச் சிவஞானநெறி
    காட்டியருளிய சிவபிரானது கோயில், நிலவுலகில் வாழும் வேதப்புலவர்கள் பல
    நாள்களும் தம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு வேதம் பயிற்றுவிப்பதைக் கேட்டுத்
    தேன் நிறைந்த பொழில்களில் வாழும் கிளிகள் நாள்தோறும் வேதங்களுக்குப்
    பொருள் சொல்லும் சிறப்பினதாய திருவீழிமிழலை ஆகும்.



    புந்தியினான் மறைவழியே புற்பரப்பி நெய்சமிதை கையிற்கொண்டு

    வெந்தழலின்
    வேட்டுலகின் மிகவளிப்போர் சேரூமூர் மிழலையாமே.(1-132-9)



    தாங்கள் பெற்ற அறிவால் வேத விதிப்படி தருப்பைப் புற்களைப் பரப்பி நெய்,
    சமித்து ஆகியவற்றைக் கையில் கொண்டு அழல் வளர்த்து வேள்வி செய்து உலகைக்
    காப்பவர்களாகிய அந்தணர்கள் சேரும் ஊராகிய திருவீழிமிழலையாகும்.


    அங்கமும் வேதமும் ஓதும்நாவர் அந்தணர் நாளும் அடிபரவ

    மங்குன் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் (1-6-1)

    நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகிய அந்தணர்கள்
    நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க,

    நெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூன்மறை யாளரேத்த

    மைதவழ் மாட மலிந்தவீதி மருகல் (1-6-2)

    அவியாக அளிக்கப் பெறும் நெய் தவழ்ந்து எரியும் முத்தீயைப் பாதுகாப்பாக
    ஓம்பி வரும் நேர்மையாளரும், முப்புரி நூல் அணிந்த வேத வித்துக்களும் ஆகிய
    அந்தணர் ஏத்த, கரிய மேகங்கள் தவழும் மாட வீடுகள் நிறைந்த வீதிகளை உடைய
    திருமருகலில் எழுந்தருளிய இறைவனே!

    நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
    டொன்றிவழி பாடுசெய
    லுற்றவன்ற னோங்குயிர்மேல்
    கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்

    கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் (1-62-3)

    அழகிதாக மலர்ந்த புதிய பூக்களைக் கொண்டு இருக்கு வேத மந்திரங்களைக் கூறி மன
    ஒருமையோடு வழிபாடு செய்த மார்க்கண்டேயனின் உயர்ந்த உயிரைக் கவரச் சினந்து
    வந்த இயமனது உயிரைப் போக்கி அம்மார்க்கண்டேயனுக்கு அன்றே என்றும்
    பதினாறாண்டாக இருக்கும் வரமளித்தவன், பொன் போல் விளங்கும் கொன்றை மலரைச்
    சூடிய எம் திருக்கோளிலிப் பெருமானாவான்

    பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை
    தங்குசெஞ் சடையினீர்
    சாமவேத மோதினீர்
    எங்குமெழிலார் மறையோர்கண் முறையாலேத்த விடைமருதில்

    மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. (2-56-1)

    சாம வேதமொர் கீத மோதியத் தசமுகன் பரவும் (2-92-8)

    சாகை யாயிர முடையார் சாமமு மோதுவ துடையார் (2-94-1)

    Sama Veda had 1000 branches (shaka-sagai) all were practiced in TN.( Now only 3 left in whole of India)

    சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித கர்த்தானும்(3-7-5)

    சடையினன் சாமவேதன்(3-56-2)

    In Madurai before the debate he prays to lord:

    வேத வேள்வியை நிந்தனை செய்துழல்

    ஆத மில்லி அமணொடு தேரரை

    வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே(3-108-1)

    வைதி கத்தின் வழியொழு காதவக்
    கைத வம்முடைக் காரமண் தேரரை
    எய்தி
    வாதுசெ யத்திரு வுள்ளமே (3-108-2)

    வேதநெறிகளைப் பின்பற்றி ஒழுகாத வஞ்சனையையுடைய கரிய சமணர்களையும்,
    புத்தர்களையும் கூட்டி வாது செய்து வெல்ல விரும்புகின்றேன்

    மறைவ ழக்கமி லாதமா பாவிகள்(3-108-3)

    அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
    கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடும்

    செறுத்து வாதுசெயத்திரு வுள்ளமே(3-108-4)

    வரையறுக்கப்பட்ட வேதத்தின் ஆறு அங்கம் வகுக்கும் கொள்கைகளை வெறுக்கும்
    சமணர்களாகிய கீழோர்களைத் தடுத்து அவர்களோடு அடியேன் வாது செய்ய உமது
    திருவுள்ளம்

    வேட்டு வேள்விசெ யும்பொரு ளைவிளி
    மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை

    ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே(3-108-6)

    அந்தணர்கள் விரும்பிச் செய்கின்ற வேள்விச் செயல்களை இகழ்ந்து பேசும்
    வன்னெஞ்சினராகிய அமண்குண்டர்களை அடியேன் வாது செய்து விரட்ட உமது
    திருவுள்ளம் யாது ?

    அந்த ணாளர் புரியு மருமறை
    சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
    சிந்த
    வாதுசெ யத்திரு வுள்ளமே(3-108-5)

    அந்தணர்கள் செய்யும் அரிய வேதக்கிரியைகளை நினைத்துப் பார்க்காத சமணர்களின்
    வலிமைகள் சிதறும்படி அடியேன் வாது செய்ய உமது திருவுள்ளம் யாது ?

    அழல தோம்பும் அருமறை யோர்திறம்

    விழல தென்னும் அருகர் திறத்திறங்

    கழல வாதுசெ யத்திரு வுள்ளமே(3-108-7)

    நாமரு கேள்வியர் வேள்வியோவா நான்மறை யோர்வழி பாடு (1-6-4)

    புனையழ
    லோம்புகை
    யந்தணாளர் பொன்னடி நாடொறும்
    போற்றிசைப்ப(1-6-6)

    மந்திர வேதங்க ளோதுநாவர் (1-6-9)

    வேதமும்வேள்வியு மோவா வேட்கள நன்னகராரே. (1-39-3)

    எண்ணுமூன்று கனலுமோம்பி யெழுமையும் விழுமியராய்த்
    திண்ணமூன்று
    வேள்வியாளர் சிரபுர மேயவனே. (1-47-6)

    ஆகவனீயம், காருகபத்தியம், தக்ஷிணாக்கினி என்று எண்ணப்படும் முத்தீயையும்
    வேட்பதுடன் எழு பிறப்பிலும் தூயவராய் உறுதிப்பாட்டுடன் தேவ யாகம்,
    பிதிர்யாகம், இருடியாகம் ஆகிய மூன்று வேள்விகளையும் புரியும் அந்தணாளர்
    வாழும் சிரபுரம் மேவிய இறைவனே;

    நாலுவேத மோதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச் (1-43-9)

    நான்மறையா றங்கமோ டைவேள்வித்

    தீயடைந்த செங்கையாளர் (1-48-5)

    வாயினால் ஓதப்பெற்ற நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் கற்று, ஐவகை வேள்விகளை
    இயற்றி, தீப் பொருந்திய சிவந்த கையினராய் விளங்கும் அந்தணர் வாழும்
    சேய்ஞலூர் மேயவனே!

    சரியாநாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன் (1-63-1)
    உச்சரிப்பு தவறாதவாறு நாவினால் வேதகீதங்களைப் பாடுபவனும், தாமரை மலர்மேல்
    விளங்குவோனும் ஆகிய நான்கு திருமுகங்களை உடைய பெரியவனாகிய பிரமன்

    அங்கமாறும் வேதநான்கு மோதுமய னெடுமால் (1-65-9)

    பலவேதம்

    அங்கமாறு மறைநான்கவையு மானார் (1-66-1)

    கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
    செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்
    பலமேய (1-80-1)

    பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
    சிறப்பர் வாழ்தில்லைச்
    சிற்றம் பலமேய (1-80-2)

    பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்ம போதத்தைக் கொன்று,
    எரியோம்பும் சிறப்புடைய அந்தணர்கள் வாழும் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில்
    எழுந்தருளியுள்ளவனும்,

    வேதத்
    தொலியோவா வீழி மிழலையே.





    (1-82-2)

    மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
    விண்ணிற் புயல்காட்டும் வீழி
    மிழலையே. (1-82-,5)
    மண்ணில் செய்யும் பெரிய வேள்விகளில் வளரும் தீப்புகை நாள்தோறும் விண்
    ணகத்தே மழைமேகங்களை உருவாக்கும் திருவீழிமிழலையாகும்.

    மறைவேள்வி பயின்றார் பாவத்தை
    விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.
    (1-82-,8)

    தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு(1-82-10)
    மிக்கா ரவர்வாழும் வீழி மிழலையே.

    தக்கவராய், வேதவேள்விகள் செய்வதில் தலையாயவராய், உலகில் மேம்பட்டவராய்
    விளங்கும் மறையவர் வாழும்

    நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்

    வல்லானை (2-11-1)

    சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய
    விடையானை
    வேதமும் வேள்வியு மாயநன்

    குடையானைக் (2-13-4)

    வேதமும் வேள்வியு மானானை (2-13-7)

    மறை
    பாடு நாவினான் (2-27-3)

    வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்

    போதினொடு போதுமலர் கொண்டுபுனை
    கின்ற (2-31-3)

    வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
    ஓதியர
    னாமமு முணர்த்திடுநள்
    ளாறே. (2-33-7)
    அந்தணர்கள் நாள்தோறும் வேள்வி செய்து
    வேதங்களை ஓதித் திருவைந்தெழுத்தின்
    சிறப்பை உணர்த்தி வரும் திருநள்ளாறு ஆகும்.

    அந்தணர்க
    ளாகுதியி லிட்டவகின் மட்டார்
    பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு
    வூரே. (2-34-7)

    அந்தணர்கள்செய்த வேள்விகளால்
    அகிலின் மணம் கமழ்வதும் அணிகலன்கள் அணிந்த
    அழகிய பெண்களின் காலடிச் சுவடுகள் உடையதுமான பழுவூர்

    While singing
    on Vedaranyam - Maraikkadu where all the 4 vedas worshipped Sambandar
    clearly mentions - Vedam, Marai all are same.r>
    சதுரம் மறைதான்
    றுதிசெய் துவணங்கும்
    மதுரம் பொழில்சூழ் மறைக்காட்
    டுறைமைந்தா(2-37-1)

    பலகா லங்கள்வே தங்கள்பா தங்கள்போற்றி
    மலரால்
    வழிபாடு செய்மா மறைக்காடா (2-37-6)

    வேதம் பலவோ மம்வியந் தடிபோற்ற

    ஓதம் முலவும் மறைக்காட் டிலுறைவாய் (2-37-10)

    வேதங்கள் பலவும்
    வேள்விகள் செய்து வியந்து உன் திருவடிகளைப் போற்ற,
    கடல்நீர் உலவும் மறைக்காட்டில் உறைகின்ற பெருமானே!

    அங்கமா
    றோடும் அருமறைகள் ஐவேள்வி
    தங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.







    (2-42-4)

    Pulirukkuvelur - Worshipped by
    Pul - Jadayu & Sambati, Irukku- Rig veda and Vel - Murugan Oor.

    வேதத்தின்
    மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
    போதத்தால் வழிபட்டான்
    புள்ளிருக்கு வேளூரே. (2-43-5)

    வெண்மணலைச் சிவலிங்கமாகத் திரட்டி
    வேதமந்திரங்களை ஓதி சடாயுவால் ஞானத்தோடு
    வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்குவேளூர்.


    தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்புந் திருநல்லூர்(2-57-9)

    வேதத்

    தொலியாற் கிளிசொற் பயிலும் வெண்காடே.





    (2-61-2)

    வேள்விப்
    புகையால் வான மிருள்கூர் வெண்காடே.





    (2-61-7)

    தீயோம்பு மறைவாணர்க் காதியாந்
    திசைமுகன் (2-81-9)

    மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத

    குறைவி லந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
    (2-89-1)

    வேதநான்கும் பதினெட்டொ டாறும்
    விரித்தார்க்கிடம் (2-114-2)

    நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும்
    பதினெண் புராணங்களையும்
    விரித்துரைத்த சிவபிரானுக்கு இடம்,

    சால நல்லார் பயிலும்
    மறைகேட்டுப் பதங்களைச்

    சோலை மேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே.(2-122-2)

    மிகவும்
    நல்லவர் பயிலும் வேதப்பதங்களைக் கேட்டு, சோலைகளில் வாழும் கிளிகள்
    அச்சொற்களை மீண்டும் கூறும் புகலியாகும்.

    கேள்வியர்
    நாடொறு மோதுநல் வேதத்தர் கேடிலா
    வேள்விசெ யந்தணர் வேதியர்
    வீழி மிழலையார் (3-9-1)

    கேள்வி ஞானம் உடையவர்களும், நாள்தோறும்
    நல்ல வேதத்தை ஓதுபவர்களும்,
    கெடுதலில்லாத யாகத்தைச் செய்கின்ற, எவ்வுயிர்களிடத்தும்
    இரக்கமுடையவர்களுமான அந்த ணர்கள், போற்றுகின்ற வேதநாயகர்
    திருவீழிமிழலையில் வீற்றிருந் தருளும் சிவபெருமானேயாவார்.

    சேடர்விண்
    ணோர்கட்குத் தேவர்நன் மூவிரு தொன்னூலர்
    வீடர்முத் தீயர்நால்
    வேதத்தர் வீழி மிழலையார்(3-9-7)

    திருவீழிமிழலையில் வீற்றிருக்கும்
    இறைவர் விண்ணோர்கட்குத் தூரமானவர்.
    மேன்மை வாய்ந்த வேதாங்க நூல்கள் ஆறினையும் கற்று வல்லவர்களாய், மூவகை அழலை
    ஓம்பி, நால் வேதங்களையும் பயின்ற அந்தணர்கட்கு அணியராகி வீட்டின்பம்
    நல்குபவர்.

    மந்திர மறையவை வான வரொடும்(3-15-1)
    பஞ்சாக்கர
    மந்திரத்தைத் தனி நடுப்பகுதியில் கொண்ட வேதங்களும்,

    This denotes Yajur
    Veda which has Sri Rudram which inturn has Panchaksharam.


    அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்

    நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே.
    (3-19-6)



    வேள்வித்தீ வளர்க்கும் அந்தணர்கள் வாழ்கின்ற அம்பர் மாநகரில் அழகிய
    சோலைகளையுடைய நிழல்தரும் பெருந் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.




    தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்(3-23-6)



    வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்

    ஓதியுமு ணர்ந்துமுள
    தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்(3-71-5)



    வேதங்களை ஓதியும், ஓதுவித்தும், வேள்விகள் பல செய்தும், விதிப்படி ஆறு
    சமயநூல்களைக் கற்றும், உணர்ந்தும் உள்ள பூவுலகதேவர்கள் என்று போற்றப்படும்
    அந்தணர்கள் தொழ அவர்கட்கு அருள்செய்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும்
    இடம்,



    வோமம்வில கும்புகைசெய் கோகரணமே. (3-79-8)

    ஓதி வேள்வி புரிய அப்புகை பரவுகின்ற திருக்கோகரணம் ஆகும்.



    மாதவர்க ளன்னமறை யாளர்கள் வளர்த்தமலி வேள்வியதனால்

    ஏதமதி லாதவகை
    யின்பமமர் கின்றவெழில் வீழிநகரே. (3-80-5)



    மாதவர்களும், அந்தணர்களும் அழலோம்பி வளர்க்கும் வேள்வியினால் பசி, பிணி,
    வறுமை, மழையின்மை முதலிய தீங்கு நேராமலும், உண்டி, நோயின்மை, செல்வம்,
    பருவ மழை முதலிய நன்மை நிகழவும், மாந்தர் மகிழ்ச்சியடைகின்ற
    திருவீழிமிழலை ஆகும்.



    மண்ணின்மறை யோர்மருவு வைதிகமு மாதவமு மற்றுமுலகத்

    தெண்ணில்பொரு ளாயவை
    படைத்தவிமை யோர்கள்பெரு மானதிடமாம்

    (3-80-6)



    இப்பூவுலகில் அந்தணர்கள் ஆற்றி வருகின்ற வைதிக தருமங்களையும், மகா முனிவர்
    ஒழுகிவருகின்ற தவநெறிகளையும், மற்றும் உலகியல் நெறி பற்றிய பல்வகை
    அறங்களையும் படைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது



    மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை மிக்கபுகைபோய்

    அந்தரவி சும்பணவி
    யற்புத மெனப்படரு மாழியிருள்வாய்(3-80-7)



    வேத மந்திரங்கள் ஓதி வளர்க்கப்படும் வேள்வியின் புகையானது மேலே சென்று
    ஆகாயத்தில் கலந்து அற்புதம் போன்று பகற்காலத்தே இருள் சூழ



    நாலுமறை யங்கமுத லாறுமெரி மூன்றுதழ லோம்பும்

    சீலமுடை யார்கணெடு
    மாடம்வள ருந்திருந லூரே. (3-83-5)



    மறைகொளும் திறலினா ராகுதிப் புகைகள்வா னண்டமிண்டிச்

    சிறைகொளும்
    புனலணிசெழும்பதி (3-89-5)



    வேதங்களை அவற்றின் பொருள் உணர்ந்து ஓதும் வன்மை படைத்த அந்தணர்கள்
    இயற்றுகின்ற வேள்விப் புகை ஆகாயத்தை அளாவி நெருங்குதலால் மழை பொழிய,
    அந்நீர் தங்கிய கரைகளையுடைய நீர்நிலைகளால் அழகுடன் விளங்கும் செழும்பதி



    தூயவானவர் வேதத் துவனியே சோதிமாலெரி வேதத் துவனியே(3-114-1)



    தேவர்கள் போற்றுகின்ற வேதத்தின் தொனியானவர். சுடர்விட்டு எரியும்
    வெம்மையுடைய வேள்வித்தீ ஆனவர்.



    வேதநூல்பயில் கின்றது வாயிலே விகிர்தனூர்திரு வாலநல் வாயிலே.
    (3-115-2)



    வேத நூல்களை அருளுவது அவரது திருவாய். விகிர்தரான அவர் விரும்பி
    வீற்றிருந்தருளுவது திரு ஆலவாய்.



    மறையு மங்கமோ ராறும் வேள்வியும் வேட்டவர்(3-118-5)



    கற்றநால் வேத மங்கமோ ராறுங் கருத்தினா ரருத்தியாற் றெரியும்


    உற்றபல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
    (3-122-4)



    தாங்கள் கற்ற நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் இவற்றின் கருத்தை
    உணர்ந்தவர்களாய், அன்பும், புகழுமுடைய அந்தணர்கள் வாழும்
    திருஓமமாம்புலியூர் உடையவர் வடதளியே.



    மணந்திகழ் திசைக ளெட்டுமே ழிசையு மலியுமா றங்கமை வேள்வி


    இணைந்தநால் வேத மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணரும்


    குணங்களு மவற்றின் கொள்பொருள் குற்ற மற்றவை யுற்றது மெல்லாம்


    உணர்ந்தவர் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
    (3-122-6)



    எட்டுத் திசைகளும் புகழ்மணங் கமழ்கின்றதும், ஏழிசைகள் மலிந்துள்ளதும்,
    ஆறங்கங்கள், ஐந்து வேள்விகள், நான்கு வேதங்கள், மூன்று எரிகள், இரண்டு
    பிறப்புக்கள் என இவற்றை ஒருமை மனத்தால் உணரும் குணங்களும், அவற்றின்
    பொருளும், குற்றமற்றவை, குற்றமுள்ளவை இவற்றை உணர்ந்து தெளிந்தவர்களும் ஆன
    அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவரான சிவபெருமான் உடையவர்
    வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.



    அம்பர மாகி யழலுமிழ் புகையி னாகுதி யான்மழை பொழியும்


    உம்பர்க ளேத்து மோமமாம் புலியூ ருடையவர் வடதளியதுவே.
    (3-122-2)



    வேள்வி ஆற்ற அதன் புகைமண்டலமானது ஆகாயத்தினை அடைந்து மழைபொழிவதும்,
    தேவர்களால் போற்றப்படுகின்றதுமான திரு ஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி
    என்னும் திருக் கோயிலாகும்.



    ஆங்கெரி மூன்று மமர்ந்துட னிருந்த வங்கையா லாகுதி வேட்கும்


    ஓங்கிய மறையோ ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
    (3-122-3)



    மூன்று எரி வளர்த்துத் தம் அழகிய கைகளால் நெய், சமித்து போன்றவைகளை
    வார்த்து வேள்விகள் செய்கின்ற, ஓங்கிய புகழையுடைய அந்தணர்கள் வாழ்கின்ற
    திருஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.




    நள்ளிருள் யாம
    நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும்


    ஒள்ளியார் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.






    (3-122-10)



    நள்ளிருள், யாமம் முதலிய அவ்வக் காலங்கட்கு ஏற்ப, நான்கு வேதங்களிலும்
    கூறியபடி தெய்வமந்திரங்களை ஓதி, நன்மை தரும் மூன்று அக்கினிகளை வளர்த்து
    வேள்வி செய்யும் மாசற்ற அறிவுடைய அந்தணர்கள் வாழும் திருஓமமாம் புலியூர்
    உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters