Thirumurai Koorum Marai,Vedam, Velvi -5 Sundarar, Manivasagar
  • Sundarar:

    Since we swa many Nal Vedam and Arangam, i am giving only a few from Sundarar

    மந்திரம் ஓதுவர் மாமறை
    பாடுவர்(7-18-9)

    பொய்யாத வாய்மையாற் பொடிபூசிப் போற்றிசைத்துப்
    பூசை செய்து

    கையினால் எரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தங்
    கருப்ப றியலூர் (7-30-6)

    பொய்கூறாத வாய்மையான உள்ளத்தோடு திரு நீற்றை அணிந்து, ` போற்றி ` எனச்
    சொல்லிப் பல வகை வழிபாடு களையும் செய்து தங்கள் கையாலே தீயை எரிவித்து வேத
    ஒழுக்கத்தை வளர்க்கின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள

    குறையாத மறைநாவர் குற்றேவ லொழியாத
    கொகுடிக் கோயில்(7-30-8)

    குறைவுபடாத வேதத்தை உடைய நாவினராகிய அந்தணர்கள் தம் சிறு பணிவிடைகளை
    நீங்காது செய்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய இறைவனை,

    சாம வேதனைத் தன்னொப்பி லானைக் (7-68-1)

    அங்கம் நான்மறை யான்நிறை கின்ற
    அந்த ணாளர் அடியது போற்றும்

    நங்கள் கோனைநள் ளாறனை (7-68-5)

    வேதனை வேத வேள்வியர் வணங்கும்
    விமல னை ( 7-68-8)

    நம்பி னார்க்கருள் செய்யும் அந்தணர்
    நான்ம றைக்கிட மாய வேள்வியுள்

    செம்பொ னேர்மடவா ரணி பெற்ற திருமிழலை(7-88-1 )

    புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில்
    ஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத்

    திரிசெய் நான்மறையோர் சிறந் தேத்துந் திருமிழலை(7-88-5)

    வேதங்களாகிய குதிரைகளைப் பூண்ட தேரின் மேல், மலையாகிய வில்லை ஏந்தி
    நின்று, மதில்கள் மூன்றையும் அழியும்படி வேறுபடுத்தவரே, நான்கு
    வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள், அறிவு மிகுந்து துதிக்கின்ற
    திருமிழலையுள்

    தீய றாக்குலையார் செழு மாடத் திருமிழலை (7-88-9)

    தீ வளர்த்தலை ஒழியாத கூட்டத்தவராகிய அந்தணர்களது, வளவிய மாடங்களையுடைய
    திருமிழலை

    வேத வேதியர் வேத நீதிய
    தோது வார்விரி நீர்மி ழலை(7-88-10)

    சொற்பொருளாய்ச் சுருங்
    காமறை நான்கினையும்
    ஓதியன் (7-97-1)

    சொல்லும் சொற்பொருளுமாய் நின்று, சுருங்குதல் இல்லாத வேதங்கள்
    நான்கினையும் ஓதியவனும்,

    அங்கமொ ராறவையும் அரு
    மாமறை வேள்விகளும்
    எங்கும் இருந்தந்தணர்
    எரி
    மூன்றவை யோம்புமிடம் (7-97-7)


    Manivasagar:

    பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்

    கண்டாரு மில்லை (8-48-1)

    நந்தம் பாடியில் நான்மறை யோனாய்

    அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்(8-2)

    மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும்
    மறையோர் கோலங் காட்டி யருளலும்(8-3)

    மூவா நான்மறை முதல்வா போற்றி (8-4)

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters