வணக்கம். வருகின்ற அக்டோபர் 13, 14 ஆகிய நாட்களில் மயிலை கச்சேரி சாலையில் உள்ள இராசா திருமண மண்டபத்தில் ஆறாம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதில் உலகம் தோன்றியதிலிருந்து... ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரையிலான வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் காட்சிப் படங்கள் அமைக்க உள்ளோம்.
மேலும் அக்டோபர் 13ஆம் நாள் மாலை 4.00 மணிக்கு உலகத் தோற்றம்... உயிர்கள் தோற்றம்... பழைய கற்கால தமிழன்... புதிய கற்கால தமிழன்... பெருங் கற்கால தமிழர்களின் வரலாற்றை வெளிப்படுத்தும் நூல் வெளியிட உள்ளோம்.
இச்செய்தியை இன உணர்வோடு பரப்பி துணை நிற்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.