> > SAGE OF KANCHI > > > >தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க்காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. >ஒரு முறைகி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார்.மேலும் “சமஸ்கிருதம் என்றால், >செம்மை செய்யப்பட்ட மொழிஎன்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்ததுசொல்லுங்கள்!” >என்கிறார். > > >கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவாசொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார் “எந்த மொழியிலும் இல்லாத >சிறப்பான எழுத்து ‘ழ’ என்பதுஇந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமைஅவற்றைக் >குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு,குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே >நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில்உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” >என்கிறார். உடனேகி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனிஎல்லா மேடைகளிலும் நான் >இதைச் சொல்லுவேன்!”என்றாராம். > > >சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்”யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் >பதிகம் மிகவும்கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் >பிரித்து மிகஎளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள்பிரமித்துப் போனார்கள். >அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா, >கீழரைஎன்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்துஎழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு, > > >முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன் >அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன் >விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன் >கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது…. > > >என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன்பொருளையும் தனக்கே உரிய முறையில், >“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டுகாலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவதுகாலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலைவருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்குமுன்னாலே >விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள >மாகாணி என்ற சுடுகாட்டுக்குப்போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ளஏகாம்பரேசுவரரை இன்றைக்கே >துதிப்பாய்!”என்று மிக அழகாக விளக்குகிறார். > > >மேலும் “என்ன அழகுபார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக்கீழேயே கொண்டுவந்து கீழரை >வரைஎட்டு அளவுகளையும்கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லிமகிழ்ந்தார். எதையுமே இப்படி >விளக்கமாகப் பொழிந்துதள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள். > > >(எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்துவரகூரான் நாராயணனால் டைப் அடிக்கப்பட்டது; >அங்கிருந்து மகேஷால் சுடப்பட்டது!!!) > > > > >veegopalji > > > > > >
In my opinion there may not be any single book to teach reading Tamil poetry. But you can find word by word meaning and explanation (pathavurai and pozhippurai) for most of the Tamil poems.