ஆசியாவின் வானுயர்ந்த கோபுரத்தை கட்டிய மாமன்னன் ராஜராஜனின் பள்ளிப்படை கோயில் இப்படி இருக்கிறதே ! வரலாறே தமிழர்களை மன்னிப்பாயா? கடல் கடந்து படை நடத்தி வெற்றி கொண்ட தமிழினமா இது ? குஷ்புவிற்கும், சச்சினுக்கும் கோயில் கட்டும் தமிழனாக ஆனவர்கள் மட்டுமா இங்கு உண்டு, குவாட்டருக்கும் பிரியாணி பொட்டலங்களுக்கும் அலையும் தமிழ் இனமும் ,செவ்வாடை ,தலைப்பாகை, அவதார சாமியார்கள் பின்னே அலையும் தமிழ் இனமும், பல்லாயிரம் தமிழர் கொல்லப்பட்டாலும் கடிதம் எழுதி கடமை தீர்க்கும் தமிழர்களும் இங்கே உண்டு உறக்கம் கலைக்காதே மன்னா, என்றாவது மானமுள்ள ஒரு தமிழன் வருவான் உன் கோயிலை வரலாற்று சின்னமாக ஆககுவான் அது வரை பொறுத்திரு... அது வரை நாங்களும் தென்னாப்ரிக்கா கிரிக்கெட் லைவ் வும், திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்தும் கூத்துக்களையும் பார்த்து விட்டு வருகிறோம்
அந்த பள்ளிப்படை கோயிலில் இருந்த இரண்டு வட்ட வடிவ தூண்களில் ராஜராஜன் சமாதி என்பதற்க்கான ஆதாரங்கள் உள்ளன அந்த தூண்கள் அருகில் உள்ள கோயிலில் இரும்பு கதவு பொருத்த எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படு கிறது அந்த தூண்களின் எழுத்துருக்களை படித்து தெரிவித்தால் உண்மை தெரியும் . முயற்சி செய்வோர் விரைந்து செய்வீர்