முருகன் கோயில்களில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் விழா கந்தசஷ்டி பெருவிழாவாகும். இந்த விழா பத்து நாட்கள் நடக்கும்.கந்தச்ஷ்டி பத்துநாள் விழாக்களில் திருவாருர அருகில் உள்ள சிக்கலில் முதல் நாள் வேல் வாங்கும் விழா மிகவும் விசேஷம். சூரசம்ஹாரம் நிகழ்ந்த இடததுக்கு அருகிலுள்ள திருச்செந்தூரில் பத்தாம் நாள் சூரசம்ஹார விழா மிகவும் விசேஷம். திருத்தணியில் மடடும்தான் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம் இல்லை. முருகப்பெருமான் கோபம் தணிந்து சாந்தமாக எழுந்தருளியிருக்கும் இடம் திருத்தணி. கும்பகோணம் அருகில் உள்ள ஸ்வாமிமலை கோயிலில் கந்தச்ஷ்டி மற்றும் திருகார்த்திகை திருவிழா மிகவும் சிறப்பாகும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் 4வது படைவீடாக திகழ்வது ஸ்வாமிமலை. பிரபவ முதல் அட்ச்ய வரையிலான 60 தமிழ் வருட பெயர்களில் படிகள் கட்டுமலையாக அமையக்கபட்டுள்ளது. இப்பொழுது கந்த சஷ்டி திருவிழா நடைப்பெற்றுவருகிறது. வரும் 11ம் தேதி சூரசம்ஹர வைபவம் நடைபெறுகிறது.இதனுடைய வீடியோவை கீழ்கணட இணையதளத்தில் காணலாம் http://www.heritagetown.org/video/video.html