More information about the great King RajaRajan-Minish
  • Dear All,

    More information about the great King RajaRajan,i got it from facebook and am sharing for our groups....

    ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு ......

    மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள்
    1. அருண்மொழித் தேவ வளநாடு
    2. உய்யக்கொண்டான் வளநாடு
    3. இராசராச வளநாடு
    4. நித்திவிநோத வளநாடு
    5. இராசேந்திர சிங்க வளநாடு
    6. இராசாசிரய வளநாடு
    7. கேரளாந்தக வளநாடு
    8. சத்திரிய சிகாமணி வளநாடு
    9. பாண்டிகுலாசனி வளநாடு

    உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு:

    இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

    1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்
    2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்)
    3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்)
    4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்)
    5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி)
    6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்)
    7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி)
    8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி)
    9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு)

    மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தன் மனைவியர்கட்கு தஞ்சை அரண்மனையில் அமைத்துக் கொடுத்த மாளிகைகளின் பட்டியல்.
    1. உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளம்
    2. அபிமான பூஷணத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
    3. ராசராசத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
    4. பஞ்சவன் மாதேவி வேளம்
    5. உத்தம சீலியார் வேளம்
    6. அருண்மொழித் தெரிந்த பரிகலத்தார் வேளம்
    7. புழலக்கன் பெண்டாட்டி அவினிசிகாமணி கீழவேளம்
    8. தஞ்சாவூர் பழைய வேளம்
    9. பண்டி வேளம்

    மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தஞ்சை மாநகரில் அமைந்திருந்த அங்காடிகள்
    1. திருபுவன மாதேவி பேரங்காடி
    2. வானவன் மாதேவி பேரங்காடி
    3. கொங்காள்வார் அங்காடி
    4. இராசராச பிரும்ம மகாராசப் மாதேவி பேரங்காடி


    இராசராசன் தனது கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ள தஞ்சை மாநகர தெருக்கள் பட்டியல்
    01. வடக்குத் தனிச்சேரி
    02. தெற்குத் தனிச்சேரி
    03. கொங்காள்வார் அங்காடி
    04. ரெளத்ர மாகாளத்து மடவளாகத்தெரு
    05. பிரமகுட்டத்து தெரு
    06. ஜய பீமதளித் தெரு
    07. ஆனைக்காடுவார் தெரு
    08. பன்மையார் தெரு
    09. வீர சோழப் பெருந்தெரு
    10. இராசராச வித்யாதரப் பெருந்தெரு
    11. வில்லிகள் தெரு
    12. மடைப்பள்ளித் தெரு
    13. சயங்கொண்ட சோழப் பெருந்தெரு
    14. சூர சிகாமணிப் பெருந்தெரு
    15. மும்முடிச் சோழப் பெருந்தெரு
    16. சாலியத் தெரு
    17. நித்தவிநோதப் பெருந்தெரு
    18. வானவன்மாதேவிப் பெருந்தெரு
    19. வீரசிகாமணிப் பெருந்தெரு
    20. கேரள வீதி

    இராசராச சோழன் போர் வெற்றி கண்ட நாடுகள்:
    01. காந்தளூர் ( திருவனந்தபுரம்)
    02. விழிஞம்
    03. பாண்டிய நாடு
    04. கொல்லம்
    05. கொடுங்கோளூர்
    06. குடமலை நாடு (குடகு)
    07. கங்கபாடி (கங்கநாடு)
    08. நுளம்பபாடி
    09. தடிகைபாடி (மைசூர்)
    10. ஈழநாடு (இலங்கை)
    11. மேலைச்சாளுக்கிய நாடு
    12. வேங்கை நாடு
    13. சீட்புலி நாடு
    14. பாகி நாடு
    15. கலிங்க நாடு
    16. பழந்தீவு பன்னீராயிரம் ( மாலைத்தீவுகள்)


    சோழ நாட்டில் கோட்டை என முடியும் ஊர்களில் சில:
    அத்திக்கோட்டை
    அருப்புக்கோட்டை
    ஆத்திக்கோட்டை
    ஆவணக்கோட்டை
    ஆதனக்கோட்டை
    ஆய்க்கோட்டை
    இடைங்கான்கோட்டை
    ஈச்சங்கோட்டை
    உள்ளிக்கோட்டை
    உச்சக்கோட்டை
    எயிலுவான் கோட்டை
    ஒளிக்கோட்டை
    பட்டுக்கோட்டை
    பரமக்கோட்டை
    பரக்கலகோட்டை
    பரவாக்கோட்டை
    பஞ்சநதிக்கோட்டை
    பருதிக்கோட்டை
    பத்தாளன்கோட்டை
    பாச்சிற்கோட்டை
    பனையக்கோட்டை
    பரங்கிலிகோட்டை
    பழங்கொண்டான் கோட்டை
    பாலபத்திரன் கோட்டை
    பாத்தாளன் கோட்டை
    பாதிரங்கோட்டை
    பாளைங்கோட்டை
    பராக்கோட்டை
    பிங்கலக்கோட்டை
    புத்திகழிச்சான்கோட்டை
    புதுக்கோட்டை
    பெரியக்கோட்டை
    பொய்கையாண்டார் கோட்டை
    பொன்னவராயன்கோட்டை
    கள்ளிக்கோட்டை
    கண்டர் கோட்டை
    கந்தர்வக்கோட்டை
    கல்லாக்கோட்டை
    கக்கரக்கோட்டை
    கரம்பயன்கோட்டை
    கருக்காக்கோட்டை
    கரும்பூரான்கோட்டை
    கரைமீண்டார் கோட்டை
    காரைக்கோட்டை
    காரிகோட்டை
    காசாங் கோட்டை
    கிள்ளிக் கோட்டை
    கிள்ளுக்கோட்டை
    கீழைக்கோட்டை
    கீழாநிலைக்கோட்டை
    குன்னங் கோட்டை
    கூராட்சிகோட்டை
    நடுவிக்கோட்டை
    நள்ளிக்கோட்டை
    நம்பன்கோட்டை
    நாஞ்சிக்கோட்டை
    நாயக்கர் கோட்டை
    நாட்டரையர் கோட்டை
    நெடுவாக்கோட்டை
    நெல்லிக்கோட்டை
    மல்லாக்கோட்டை
    மலைக்கோட்டை
    மண்டலகோட்டை
    மயிலாடு கோட்டை
    மயிலாளிகோட்டை (மயில்கோட்டை)
    மருதக்கோட்டை
    மகிழங்கோட்டை
    மழவன்கோட்டை (மகழன்கோட்டை)
    மண்டலகோட்டை
    மானரராயன் புதுக்கோட்டை
    மாங்கோட்டை
    மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை)
    மூவரையர் கோட்டை
    மேலைக்கோட்டை
    தம்பிக்கோட்டை
    தளிக்கோட்டை
    தர்மக்கோட்டை
    தாமரங்கோட்டை
    தாமிரன்கோட்டை
    திருமங்கலக்கோட்டை
    திருமலைக்கோட்டை
    திருமக்கோட்டை
    துரையண்டார்க் கோட்டை
    துறையாண்டார் கோட்டை
    தெற்குக் கோட்டை
    சத்துருசங்காரக் கோட்டை
    சாக்கோட்டை
    சாய்க்கோட்டை
    சிறுகோட்டை
    சுந்தரகோட்டை
    சூரக்கோட்டை
    செங்கோட்டை
    செஞ்சிக்கோட்டை
    சோணாகோட்டை
    சேண்டாகோட்டை
    வாட்டாட்சிகோட்டை (வாவாசிகோட்டை)
    வத்தானக்கோட்டை
    வாகோட்டை
    வாளமரங் கோட்டை
    வாழவந்தான் கோட்டை
    வீரயன்கோட்டை (வீரியன்கோட்டை)
    வெண்டாக்கோட்டை
    வெட்டுவாகோட்டை


    இராஜராஜனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராஜராஜன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது,
    தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.
    இராஜராஜன் மூன்று புதல்விகளைப் பெற்றிருத்தல் வேண்டும், ஏனெனில் திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டு சாளுக்கிய விமலாத்தினை மணந்த இளைய குந்தவையைத் தவிர, மாதேவடிகள் என்பாளை நடு மகளாகக் குறிப்பிட்டுள்ளது.
    அதிகாரிகளும் திறை செலுத்திய குறுநில மன்னர்களும்இராஜராஜ சோழனுடைய அதிகாரம் கங்க, வேங்கி மண்டலங்களிலும் கங்க நாட்டு மன்னனுக்குத் திறை செலுத்திய குறுநில மன்னர்கள் மீதும் பரவியிருந்தது. மும்முடிச் சோழன் என்றழைக்கப்பட்ட பரமன் மழபாடியார் என்னும் படைத்தலைவன் சீத்புலி, பாகி ஆகிய நாடுகளை வென்றவன்.


    திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், பழுவூரைச் சுற்றியுள்ள சிறுபகுதி ஒன்றின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தவர் பழுவேட்டரையர் என்பவர்களாவார். இவர்கள் சோழ குடும்பத்திற்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையரின் இளவரசியை மணந்திருந்தான். இராஜராஜனுக்குத் திறை செலுத்திய பழுவூர்க் குறுநில மன்னனான அடிகள் பழுவேட்டரையன் கண்டன்மறவன்
    என்பவன் குறுநில மன்னர்களுக்கு உரிய சிறப்புக்களையும் பெற்று ஆட்சி செய்து வந்தான்.
    மதுராந்தகன் கண்டராதித்தன் உத்தம சோழனின் மகன் ஆவான், இராஜராஜன் ஆட்சியில் இவன் கோயில்களைக் கண்காணித்து, அவற்றில் தவறிழைத்தவர்களை விசாரித்து, தண்டித்து, எதிர்காலத்தில் தவறிழைக்காதபடி நல்ல நிலையில் பாதுக்காகும் ஏற்பாடுகளைச் செய்தான்.
    வைதும்பர்களைப் போன்று, முதலாம் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்களும், சோழர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களது நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகளாகப் பங்கேற்றனர். மாறவன் நரசிம்மவர்மன் என்ற வாண மன்னன் தென் ஆற்காடு மாவட்டத்தில் ஜம்பையை அடுத்த பகுதிகளை இராஜராஜனது இறுதிக் காலத்தில் ஆட்சி செய்தான்.


    பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்:
    1. உத்திர மந்திரி
    2. பெருந்தர அதிகாரிகள்
    3. திருமந்திர ஓலை
    4. திருமந்திர ஓலை நாயகம்
    5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி
    6. வரியிலிடு
    7. காடுவெட்டி
    8. உடன் கூட்டத்து அதிகாரி
    9. அனுக்கத் தொண்டன்
    10. நடுவிருக்கை
    11. விடையில் அதிகாரி
    12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
    13. புரவரித் திணைக்களம்
    14. புரவரி திணைக்களத்து நாயகம்
    15. வரிப் பொத்தகம்
    16. முகவெட்டி
    17. வரிப்பொத்தகக் கணக்கு
    18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
    19. கடமை எழுதுவோன்
    20. பட்டோலை
    21. ராகாரிய ஆராய்ச்சி
    22. விதிசெய்


    பெண் அதிகாரிகள்:
    அரசியின் ஆணையை நிரவேற்றிய பெண் அதிகாரி ”அதிகாரிச்சி” என்று அழைக்கப் பட்டாள்
    சபைக்குரிய அலுவலர்கள்
    பிணக்கறுப்பான் (அ) நடுநிலையாளன்
    கிராமசபை நடைபெறும்போது உதவி செய்வதோடு அங்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நடுநிலையாக இருந்து தீர்ப்பவனாவான்.


    கணக்கன்:
    சபைக்குரிய கணக்கை எழுதுபவன் ஆவான். சபை விரும்பும்போது கணக்கை அவ்வப்போது காட்டுவதோடு ஆண்டு இறுதியில் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
    கீழ்க்கணக்கன். கணக்கனுக்கு உதவி செய்பவன்:
    பாடி காப்பான்:
    கலகம், திருட்டு முதலான குற்றங்கள் ஊரில் நிகழாவண்ணம் காப்பவன்.
    தண்டுவான்:

    கிராம மக்கள் அரசிற்கும், ஊர்ச்சபைக்கும் கொடுக்க வேண்டிய வரிகளை வலிப்பவனாவான்.

    அடிக்கீழ் நிற்பான்:
    ஊர்ச் சபையாருக்குக் குற்றவேல் புரிபவன்.


    சோழர் காலத்தில் மக்களுக்கு இடப்பட்ட வரிகள்
    மக்களின் தேவைகள் மகேசனின் தேவைகள், அதை நிறைவேற்ற அரசுக்கு பொருள் வேண்டாமா?
    இதோ அரசின் வருவாய்க்காண 'வரி'கள்:
    1. அங்காடிப் பட்டம்
    2. இடப்பாட்டம்
    3. இலைக் கூலம்
    4. இரவுவரி
    5. இறை
    6. ஈழம்
    7. உல்கு
    8. ஊரிடுவரி
    9. எச்சோறு
    10. ஏரிப்பாட்டம்
    11. ஓடக்கூலி
    12. கண்ணாலக்காணம்
    13. காவேரிக்கரை வினியோகம்
    14. குசக்காணம்
    15. குடிமை
    16. சபாவினியோகம்
    17. சித்தாயம்
    18. சில்லிறை
    19. சில்வரி
    20. செக்கிறை
    21. தட்டார்ப் பாட்டம்
    22. தரகு
    23. தறியிறை
    24. நாடுகாவல்
    25. நீர்க்கூலி
    26. பாடிகாவல்
    27. பூட்சி
    28. போர்வரி
    29. மரமஞ்சாடி
    30. மரவிறை
    31. மனை இறை
    32. மீன் பாட்டம்
    33. வண்ணாரப்பாறை
    சோழர்கால கப்பல்கள்:
    கடல் கடந்து வாணிகத்திலும், ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும்

    கப்பலின் பெயர்கள்.
    1. வங்கம்
    2. பாடை
    3. தோணி
    4. யானம்
    5. தங்கு
    6. மதலை
    7. திமில்
    8. பாறு
    9. அம்பி
    10. பாரி
    11. சதா
    12. பாரதி
    13. நௌ
    14. போதன்
    15. தொள்ளை
    16. நாவாய்

    சோழர் கால கல்வெட்டுக்களில் மாதங்கள்:
    மேச ஞாயிறு - சித்திரை மாதம்
    ரிசிப ஞாயிறு - வைகாசி மாதம்
    மிதுன ஞாயிறு - ஆனி மாதம்
    கடக ஞாயிறு - ஆடி மாதம்
    சிம்ம ஞாயிறு - ஆவணி மாதம்
    கன்னி ஞாயிறு - புரட்டாசி மாதம்
    துலா ஞாயிறு - ஐப்பசி மாதம்
    விருச்சிக ஞாயிறு - கார்த்திகை
    தனுர் ஞாயிறு - மார்கழி மாதம்
    மகர ஞாயிறு - தை மாதம்
    கும்ப ஞாயிறு - மாசி மாதம்
    மீன ஞாயிறு- பங்குனி மாதம்

    சோழர் கால இலக்கண நூல்கள்:
    தண்டியலங்காரம்
    நன்னூல்
    நேமிநாதம்
    புறப்பொருள் வெண்பாமாலை
    யாப்பெருங்கலம்
    வீரசோழியம்
    வெண்பாப் பாட்டியல்
    சோழர் கால நிகண்டு:
    பிங்கலந்தை
    சோழர் கால ஏரிகள்:
    செம்பியன் மாட்தேவிப் பேரேரி - கண்டராதித்தம்
    மதுராந்தகம் ஏரி- மதுராந்தகம்
    பொன்னேரி - ஜெயங்கொண்டம்
    வீரநாராயண பேரேரி- வீராணம்
    திரிபுவனப் பேரேரி - திரிபுவனம் (பாண்டிச்சேரி)
    வீரசிகாமணிப் பேரேரி- அல்லூர்
    திரிபுவன மாதேவப் பேரேரி - புத்தூர்
    கவீர ஏரி ( கவிநாடு ஏரி) - புதுக்கோட்டை
    சோழர் கால துறைமுகப்பட்டினங்கள்:
    பழவேற்காடு.
    சென்னப்பட்டினம்
    மாமல்லை.
    சதுரங்க்கப்பட்டினம்
    வசவ சமுத்திரம்
    மரக்கானம்
    கடலூர்
    பரங்கிப்பேட்டை
    காவேரிப்பூம்பட்டினம்
    தரங்கம்பாடி
    நாகப்பட்டினம்
    முத்துப்பேட்டை
    தொண்டி
    தேவிப்பட்டினம்
    அழகங்குளம் (மருங்கூர்ப்பட்டினம்)
    இராமேசுவரம்
    பெரிய பட்டினம்
    குலசேகரப்பட்டினம்
    தூத்துக்குடி
    கொற்கை
    காயல்பட்டினம்
    குமரி.

    உலகளந்தான் கோல்:
    சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறைச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.
    எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.


    உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்:
    24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
    25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
    26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
    27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
    28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
    29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
    30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
    31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்
    33” ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.

    இராஜராஜன் பற்றிய புனைவு ஆக்கங்கள்
    இராஜராஜ சோழன் - கலைமாமணி ஆர்.ராமநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடக பிரதி.இந் மேடை நாடகபிரதியே பின்னர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.இந்நாடகப்பிரதி நூல்வடிவாக பிரேமா பிரசுரம் சென்னை-24 ஆல் வெளியிடப்பட்டுள்ளது.தென்னிந்திய பல்கழைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட Study Material ஆகவும் இந்நூல் காணப்படுகின்றது.
    பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட வரலாற்று நாவல் இதில் அருண்மொழிவர்மன் எனும் இயற்பெயருடன் இராஜ இராஜனின் இளமைப்பருவம் பற்றிய தகவல்களுடன் நாவல் எழுதப்பட்டுள்ளது.
    உடையார் - பாலகுமாரனால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் பேரரசனான பின்னர் நடந்த நிகழ்வுகளைப்பற்றி குறிப்பிடுகின்றது.
    காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் காலத்தில் காந்தளூர் சாலையில் இடம்பெற்ற போர் பற்றிய நிகழ்வுகளை குறிக்கின்றது —
  • thanks a lot vazgha valamudan
  • Very nice info
    Sri


    If I can stop one heart from breaking,I shall not live in vain;
    If I can ease one life the aching,Or cool one pain,
    Or help one fainting robin, Into his nest again,
    I shall not live in vain.
    Emily Dickinson





    To: [email protected]

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters