நேற்று நானும் நண்பர் அரவிந்தும் வீராணம் கரை வழியாக கடம்பூர் சென்றோம். அவ்வளவு பிரம்மாண்டமான ஏரி. தண்ணீர் மட்டும் கற்பனையில். நாம் அதை தூர் கூட வாரவில்லை. 1100 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் செய்ததில் நூற்றில் ஒரு பங்கு கூட நம்மால் செய்ய முடியவில்லை. வீராணம் ஏரியாவது இருக்கிறது. பெரம்பலூர், அரியலூர் பகுதிகளை செழிப்பாக்கிய கோதண்டராமன் வாய்க்கால் எங்கிருக்கிறது என்று தெரியவே இல்லை. இன்றைய ஜெயம்கொண்டம் முந்திரிக்காட்டை ஒரு காலத்தில் நெற்களஞ்சியம் ஆக்கிய வாய்க்கால். ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைவிட, நம் நீர்நிலைகளைக் கொன்றவர்கள் கொடியவர்கள்.