என்னுடைய மலர்ச்சோலை மங்கைக்கு அடுத்தபடியாக, ஒரு வரலாற்று புதினம் எழுத திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறேன்.
சிந்துசமவெளியில் இருந்த இனம் பற்றி விரிவான ஆராச்ய்சிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். மகாதேவன் போன்ற பெரும் அறிஞர்களின் கருத்து அங்கு வாழ்ந்தவர்கள் தமிழ் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதே. ஆனாலும் இது இன்னும் பூரணமாக சொல்லப்படவில்லை.
இதை ஆதராமாகக் கொண்டு மொகஞ்சோதராவில் வாழ்ந்த இனம் தமிழ் இனமாக கொண்டு, அவர்களின் வாழ்வைப் பற்றி அழகிய தமிழில் நவீனம் எழுதலாம் என்று இருக்கிறேன்.
வாசக நண்பர்கள் தங்களின் மேலான கருத்துகளை தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.